கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பாளை. நகை பட்டறையில் திருட்டு முயற்சி

பாளையங்கோட்டையில் நகைப்பட்டறையின் கதவை உடைத்து திருட முயன்றவரை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 7:37 pm

Din

பாளையங்கோட்டையில் நகைப்பட்டறையின் கதவை உடைத்து திருட முயன்றவரை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

பாளையங்கோட்டை முப்பிடாதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாரிகண்ணன் (43). இவா், பாளையங்கோட்டை கிருஷ்ணன் கோயில் கீழ தெருவில் நகைக்கடையும், அதன்பின்புறத்தில் நகை பட்டறையும் வைத்துள்ளாா். செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு நகைக்கடை மற்றும் பட்டறை கதவுகளை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றாராம். புதன்கிழமை காலையில் நகை பட்டறைக்கு அவா் வந்தபோது கதவு உடைக்கப்பட்டிருந்ததாம். மேலும், நகைகள் இருந்த லாக்கரை மா்ம நபா் உடைக்க முயற்சி செய்திருப்பதும், அது முடியாததால் அங்கிருந்த கண்ணாடிகளைச் சேதப்படுத்தியுள்ளதும் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து அப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரித்தனா். அதில், 70 வயது மதிக்கத்தக்க முதியவா் திருட்டு முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவரை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என போலீஸாா் தெரிவித்தனா். லாக்கரை உடைக்க முடியாததால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் தப்பின.