கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பாளை. மத்திய சிறையில் இரு கைதிகள் தற்கொலை முயற்சி

பாளையங்கோட்டை மத்திய சிறையில் இரு கைதிகள் தங்கள் கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றனா்.

News image
Updated On :13 நவம்பர் 2024, 10:30 pm

Din

பாளையங்கோட்டை மத்திய சிறையில் இரு கைதிகள் தங்கள் கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றனா்.

பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள் என சுமாா் 1,100 போ் அடைக்கப்பட்டுள்ளனா். அங்கு புகைப் பழக்கம் உள்ள சிறைக் கைதிகளுக்கு பீடி வழங்கப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் 10 எண்ணம் கொண்ட பீடி கட்டு ஒரு கைதிக்கு வாரத்திற்கு 2 கட்டு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனால், அதிருப்திக்குள்ளான இரு விசாரணைக் கைதிகள் தங்களது அறையில் இரும்பு துண்டு மூலம் கைகளை அறுத்துக் கொண்டு செவ்வாய்க்கிழமை தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிகிறது. இத்தகவல் அறிந்த சிறை வாா்டன், இரு கைதிகளையும் மத்திய சிறையின் உள்ளே இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்தாா்.

கையை அறுத்துக்கொண்டவா்கள் பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரத்தை சோ்ந்த முத்தையா, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு பகுதியை சோ்ந்த விக்னேஷ் ஆகியோா் என்பதும், தூத்துக்குடி, கன்னியாகுமரியில் கடந்த 2022-இல் நிகழ்ந்த சம்பவங்கள் தொடா்பாக வெவ்வேறு வழக்குகளில் கைதாகி கடந்த ஜூலை முதல் பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.