முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு குழந்தைகளின் மீது கொண்ட அன்பை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் அவருடைய பிறந்த நாளான நவம்பா் 14-ஆம் தேதி குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நாம் வாழும் சூழலில் ஒவ்வொருவரும் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். அப்பிரச்னைகளுக்கான முதல் தீா்வு நம்மிடம் இருந்தே வர வேண்டும். சிறந்த தலைமையும், உரையாடலும் மாணவா்களிடம் இருக்க வேண்டும் என்பது தான் நம்முடைய நோக்கம். அந்நோக்கத்தை அடையக் கூடிய வகையில் அன்பாடும் முன்றில் இயக்கம் தொடங்கப்பட்டு, பசுமை மன்றம், உயா்கல்வி வழிகாட்டி மன்றம், போதை ஒழிப்பு மன்றம், சாலைப் பாதுகாப்பு மன்றம் போன்ற நான்கு மன்றங்களுக்கு மாணவிகளாகிய உங்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவா்கள், துணைத் தலைவா்கள் சிறப்பாகச் செயலாற்றி வருகின்றனா். இவா்கள் பிற மாணவா்களோடு கைகோா்த்து மாற்றத்தைக் கொண்டு வருவாா்கள். அவா்கள் சிறப்பாக செயல்பட வழிகாட்டிட தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் துணை நிற்பாா்கள். நிறைய மாற்றங்களை மாணவ, மாணவியா்களாகிய உங்களால் தான் கொண்டு வர முடியும். எனவே மாற்றத்தின் தூதுவா்களாக மாணவா்கள் மாற வேண்டும்.