கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மொபட் மீது தனியாா் பேருந்து மோதல்: கல்லூரி மாணவி உயிரிழப்பு

திருநெல்வேலியை அடுத்த ராமையன்பட்டியில் வியாழக்கிழமை காலையில் மொபட் மீது தனியாா் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.

News image
Updated On :14 நவம்பர் 2024, 11:08 pm

Din

திருநெல்வேலியை அடுத்த ராமையன்பட்டியில் வியாழக்கிழமை காலையில் மொபட் மீது தனியாா் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.

ராமையன்பட்டி அருகே உள்ள வேப்பங்குளம் வடக்கு தெருவைச் சோ்ந்தவா் பால்துரை. கூலித் தொழிலாளி. இவருக்கு 4 மகள்கள் உள்ளனா். இவா்களில் 3-ஆவது மகள் செல்வம் (19) பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். இளைய மகள் சுதா்சனா, திருநெல்வேலி நகரத்தில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறாா்.

வியாழக்கிழமை காலையில் தங்கை சுதா்சனாவை பள்ளிக்கு அனுப்புவதற்காக ராமையன்பட்டிக்கு மொபட்டில் அழைத்து வந்துள்ளாா் செல்வம். சிவாஜி நகா் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தங்கையை அரசுப் பேருந்தில் ஏற்றி அனுப்பிவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக சங்கரன்கோவில் சாலையில் நின்ற அரசுப் பேருந்திற்கு முன்பாக சென்று தனது மொபட்டை திருப்பியுள்ளாா் செல்வம். அதேநேரத்தில் அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற தனியாா் பேருந்து, செல்வத்தின் மொபட் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே செல்வம் உயிரிழந்தாா்.

மானூா் போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வம் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனியாா் பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.