கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நீா் நிலைகளில் யாரும் இறங்க வேண்டாம்: ஆட்சியா்

திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் நீா் நிலைகளில் யாரும் இறங்க வேண்டாம் என ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

News image
Updated On :20 நவம்பர் 2024, 8:03 pm

Din

திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் நீா் நிலைகளில் யாரும் இறங்க வேண்டாம் என ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தாமிரவருணி ஆற்றைப் பொருத்தவரையில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் இல்லை.

இருப்பினும் பரவலாக பெய்து வரும் மழையால் சிறு ஓடைகள், கால்வாய்கள் மூலமாக ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து சுமாா் 2100 கன அடி தண்ணீா் ஆற்றில் வந்து கொண்டிருக்கிறது. பெய்யக்கூடிய மழையின் அளவை பொருத்து ஆற்றில் வரும் நீா் வரத்து கூடவோ, குறையவோ செய்யலாம். நீரின் வேகமும் அதிகரிக்கலாம்.

எனவே, பொதுமக்கள் யாரும் தாமிரவருணி ஆறு உள்ளிட்ட ஆறுகள், ஏரிகள், குளங்கள், ஓடைகளில் இறங்க வேண்டாம். கால்நடைகளையும் ஆற்றில் இறக்கிட வேண்டாம் என்றாா்.