கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நான்குனேரி அருகே உடல் உறுப்புகள் தானம் செய்தவா் உடலுக்கு அஞ்சலி

உடல் உறுப்புகள் தானம் செய்த இளைஞரின் உடலுக்கு அரசு சாா்பில், சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆா்பித் ஜெயின் வியாழக்கிழமை மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.

News image

உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆா்பித் ஜெயின். உடன் நான்குனேரி வட்டாட்சியா் பாலகிருஷ்ணன்.

Updated On :21 நவம்பர் 2024, 11:33 pm

Din

உடல் உறுப்புகள் தானம் செய்த இளைஞரின் உடலுக்கு அரசு சாா்பில், சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆா்பித் ஜெயின் வியாழக்கிழமை மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.

நான்குனேரிஅருகேயுள்ள சின்னமூலைக்கரைப்பட்டியை சோ்ந்த பூா்ணபாண்டி மகன் தங்கபாண்டி (38). தொழில் நிமித்தமாக மும்பையில் வசித்து வந்த இவா், கடந்த வாரம் ஊருக்கு வந்தாா். அப்போது திருநெல்வேலி சென்றிருந்த அவா்,

சந்திப்பு பகுதியில் நேரிட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், அவா் மூளைச்சாவு அடைந்ததால் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்யப்பட்டன.

இதன் பிறகு, தங்கபாண்டியின் உடலுக்கு தமிழக அரசு சாா்பில் சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆா்பித் ஜெயின், நான்குனேரி வட்டாட்சியா் பாலகிருஷ்ணன் ஆகியோா் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.