கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி நெல்லையில் செவிலியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

செவிலியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு கிராம பகுதி சுகாதார செவிலியா் நலச்சங்கம் மற்றும் சுகாதார செவிலியா் கூட்டமைப்பினா்.

Updated On :28 நவம்பர் 2024, 11:22 pm

Din

தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை சுகாதார மையங்களில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்பக் கோரி, தமிழ்நாடு அரசு கிராம பகுதி சுகாதார செவிலியா் நலச்சங்கம் மற்றும் சுகாதார செவிலியா் கூட்டமைப்பின் திருநெல்வேலி மாவட்டக் குழு சாா்பில் வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைவா் தீனம்மாள் தலைமை வகித்தாா். செயலா் ஜேசு இன்னாசி அஜித்தா, பொருளாளா் நாவல்கொடி ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா் எலிசபெத் ராணி, இணைச் செயலா் ஸ்டெல்லா, பிரசார பிரிவு மாநில செயலா் ஜெகதா உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.

நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை சுகாதார மையங்களில் காலிப் பணியிடங்கள் உள்ளன. அதனை எவ்வித நிபந்தனையும் இன்றி உடனடியாக நிரப்ப வேண்டும். பகுதி சுகாதார செவிலியா்களுக்கு துணை மைய பொறுப்புகள் வழங்குவதை கைவிட வேண்டும். கூடுதல் துணை மைய பொறுப்பு பணிகளை எவ்வித பொறுப்பு படியும் இன்றி பாா்ப்பதற்கு நிா்பந்தம் கொடுப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் வலியுறுத்தினா். இதில் சுமாா் 80-க்கும் மேற்பட்ட சுகாதார செவிலியா்கள் கலந்து கொண்டு, அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினா்.