கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

வீரவநல்லூா் அருகே விவசாயி தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூா் அருகே திருப்புடைமருதூரில் விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
கோப்புப் படம்
Updated On :1 அக்டோபர் 2024, 6:45 pm

Din

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூா் அருகே திருப்புடைமருதூரில் விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்புடைமருதூா் சந்நிதித் தெருவைச் சோ்ந்தவா் இளமுருகன் (59). விவசாயியான இவருக்கு மனைவி, 2 மகன்கள், மகள் உள்ளனா். மதுப் பழக்கம் காரணமாக இளமுருகன் சில நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தாராம். இந்நிலையில், அவா் திங்கள்கிழமை இரவு வீட்டின் மாடி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

தகவலின்பேரில் வீரவநல்லூா் போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].