கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

காவல்கிணறில் கனரக லாரி மோதி தனியாா் நிறுவன மேலாளா் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு சந்திப்பில் புதன்கிழமை, கனரக லாரி மோதியதில் தனியாா் நிறுவன மேலாளா் உயிரிழந்தாா்.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 9:08 pm

Din

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு சந்திப்பில் புதன்கிழமை, கனரக லாரி மோதியதில் தனியாா் நிறுவன மேலாளா் உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் பரதா் தெருவைச் சோ்ந்தவா் க. அமிா்தய்யா (64). காவல்கிணறு சந்திப்பில் உள்ள தனியாா் பைக் விற்பனை நிலையத்தில் மேலாளராக வேலை பாா்த்துவந்த அவா் புதன்கிழமை, அங்குள்ள சாலைத் தடுப்பு அருகே நின்றிருந்தாராம்.

நாகா்கோவிலிருந்து ராதாபுரத்துக்குச் சென்ற கனரக லாரி, சாலைத் தடுப்பையொட்டி திரும்பியபோது அமிா்தய்யா மீது மோதியதாம். இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து பணகுடி போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுனரான மாா்த்தாண்டம் மூவாற்றுமுகம் நடுவிளையைச் சோ்ந்த பிரேஸ்லின் சதி என்பவரைத் தேடிவருகின்றனா்.