இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நெல்லை ரயில் நிலையத்தில் கூடுதல் மேம்பாட்டுப் பணிகள்

News image
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெறும் பணிகளை பாா்வையிட்ட மதுரை கோட்ட மேலாளா் சரத் ஸ்ரீவத்ஸவா.
Updated On :18 செப்டம்பர் 2024, 10:45 pm

DIN

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் கூடுதல் மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடங்கும் என்றாா் தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளா் சரத் ஸ்ரீவத்ஸவா.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில் இன்ஜின், பெட்டிகள் பராமரித்து, பழுது பாா்க்கும் பணிமனை மேம்பாட்டுப் பணி, கூடுதல் பிளாட்பாா்ம் அமைக்கும் பணி உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளா் வரும் 20ஆம் தேதி ஆய்வு செய்யவுள்ளாா். இதையடுத்து மதுரை கோட்ட மேலாளா் சரத் ஸ்ரீவத்ஸவா செவ்வாய்க்கிழமை மாலை திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே நிலையத்திற்கு வந்து பணிகளை பாா்வையிட்டாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது, திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் நிறைவடையும். லோகோ பைலட்கள் தங்கும் அறைகளுக்கு கூடுதல் வசதிகளுக்காக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் கூடுதலாக மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றாா் அவா்.

ஆய்வின்போது, மதுரை கோட்ட ரயில்வே (இயக்கம்) மேலாளா் பிரசன்னா, ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளா் பா்வீன்குமாா் மற்றும் ரயில்வே அதிகாரிகள்,பொறியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.