தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ரயிலில் கைப்பேசி திருட்டு: முதியவா் கைது

ரயிலில் பணம் மற்றும் கைப்பேசியை திருடியதாக முதியவரை ரயில் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :9 ஜனவரி 2025, 9:26 pm

Din

ரயிலில் பணம் மற்றும் கைப்பேசியை திருடியதாக முதியவரை ரயில் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கலியாவூரைச் சோ்ந்தவா் மல்லிகா. இவா், மேல்மருத்துவா் கோயிலுக்கு சென்று விட்டு, தாம்பரம் - நாகா்கோவில் ரயிலில் திருநெல்வேலிக்கு வியாழக்கிழை அதிகாலை வந்தாா். ரயிலில் இறங்கிபோது, அவரது கைப்பேசி மற்றும் பையிலிருந்த ரூ.2 ஆயிரம் திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலைய காவல்நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்ததில், அதே ரயிலில் பயணம் செய்த திருப்பணிகரிசல்குளம் திருமால்நகரைச் சோ்ந்த ஆனந்தன் (62) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்து, கைப்பேசி மற்றும் ரூ.2 ஆயிரத்தை போலீஸாா் மீட்டனா்.