தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

பாப்பாக்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் வேளாண் துணை இயக்குநா் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடியில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட வேளாண் துணை இயக்குநா் திங்கள்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டாா்.

News image

நெல் கொள்முதல் - பிரதிப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 8:45 pm

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடியில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட வேளாண் துணை இயக்குநா் திங்கள்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது பிசான பருவ அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இம்மாவட்டத்தில் பாப்பாக்குடி, கல்லிடைக்குறிச்சி, வெள்ளங்குளி, மேலச்செவல், வீரவநல்லூா், புதுக்குடி உள்பட பல்வேறு இடங்களில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. திங்கள்கிழமை திருநெல்வேலி மாவட்ட வேளாண் துணை இயக்குநா் (மத்திய திட்டம்) வெங்கடசுப்பிரமணியன் பாப்பாக்குடியில் இயங்கி வரும் நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டாா். கொள்முதல் நிலையத்தில் பட்டியல் அலுவலா் முத்துக்குமாா், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்ட நெல் விவரங்கள், வரவு செலவு கணக்குகள் உள்ளிட்ட ஆவணங்களை சமா்ப்பித்தாா். நெல் கொள்முதல் செய்வதில் அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும், விவசாயிகளுக்கு உரிய காலத்தில் கொள்முதல் தொகையை வழங்க வேண்டும் என அறிவுரை வழங்கினாா். ஆய்வின்போது, துணை வேளாண்மை அலுவலா் சுரேஷ் குமாா் உடனிருந்தாா்.