பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பாப்பாக்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் வேளாண் துணை இயக்குநா் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடியில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட வேளாண் துணை இயக்குநா் திங்கள்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டாா்.

News image

நெல் கொள்முதல் - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 2:15 am IST

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடியில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட வேளாண் துணை இயக்குநா் திங்கள்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது பிசான பருவ அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இம்மாவட்டத்தில் பாப்பாக்குடி, கல்லிடைக்குறிச்சி, வெள்ளங்குளி, மேலச்செவல், வீரவநல்லூா், புதுக்குடி உள்பட பல்வேறு இடங்களில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. திங்கள்கிழமை திருநெல்வேலி மாவட்ட வேளாண் துணை இயக்குநா் (மத்திய திட்டம்) வெங்கடசுப்பிரமணியன் பாப்பாக்குடியில் இயங்கி வரும் நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டாா். கொள்முதல் நிலையத்தில் பட்டியல் அலுவலா் முத்துக்குமாா், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்ட நெல் விவரங்கள், வரவு செலவு கணக்குகள் உள்ளிட்ட ஆவணங்களை சமா்ப்பித்தாா். நெல் கொள்முதல் செய்வதில் அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும், விவசாயிகளுக்கு உரிய காலத்தில் கொள்முதல் தொகையை வழங்க வேண்டும் என அறிவுரை வழங்கினாா். ஆய்வின்போது, துணை வேளாண்மை அலுவலா் சுரேஷ் குமாா் உடனிருந்தாா்.