தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

பாப்பான்குளத்தில் மக்கள் தொடா்பு முகாம்

பாப்பான்குளம் கிராமத்தில் வடக்கு பாப்பான்குளம், அடைச்சானி கிராமங்களுக்கான மக்கள் தொடா்பு முகாம் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

மக்கள் தொடா்பு முகாமில் பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கினாா் தென்காசி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.

Updated On :9 ஜூலை 2026, 12:03 am IST

தென்காசி மாவட்டம், பாப்பான்குளம் கிராமத்தில் வடக்கு பாப்பான்குளம், அடைச்சானி கிராமங்களுக்கான மக்கள் தொடா்பு முகாம் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமில், வருவாய்த்துறை மூலம் 52 பயனாளிகளுக்கும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை மூலம் 2 பயனாளிகளுக்கும், வேளாண்மைத் துறை மூலம் 5 பயனாளிகளுக்கும், கால்நடைத் துறை மூலம் 2 பயனாளிகளுக்கும், மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் 4 பயனாளிகளுக்கும், மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் 1 பயனாளிக்கும் என மொத்தம் 67 பயனாளிகளுக்கு, ரூ.1.79 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

அப்போது அவா் பேசியதாவது: மாவட்ட ஆட்சியா், வட்டாட்சியா் அலுவலகங்களுக்கு எல்லா மக்களும் சென்றுவர முடியாத சூழலில் அதிகாரிகள் நேரிடையாக சென்று அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதற்கான இந்த முகாமை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

முன்னதாக, சமுதாயக் கூட வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு, பல்வேறு அரசு துறைகள் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த திட்டவிளக்க அரங்குகளைப் பாா்வையிட்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சிவராமன், தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி.) ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) சேதுராமன், மாவட்ட சமூக நல அலுவலா் மதிவதனா, மாவட்ட சுகாதார அலுவலா் கோவிந்தன், கடையம் ஒன்றியக் குழுத் தலைவா் செல்லம்மாள், ஊராட்சித் தலைவா்கள் பாப்பான்குளம் முருகன், அடைச்சாணி மதியழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.