போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

பயிா்க் கடன், நெல் கொள்முதல் பணப் பிரச்னை: நெல்லையில் ஜூன் 15இல் விவசாயிகள் போராட்டம்

News image

கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 4:48 am IST

மத்திய அரசின் நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்த நெல்லுக்கு 3 மாதங்களாக பணம் வழங்காததைக் கண்டித்தும், தவெக தோ்தல் வாக்குறுதிபடி கூட்டுறவு வங்கியின் பயிா்க் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் திருநெல்வேலியில் ஜூன் 15ஆம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் மாவட்டத் தலைவா் கானாா்பட்டி ஆபிரஹாம் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் 30 இடங்களில் மத்திய அரசின் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கொள்முதல் நிலையங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்துள்ளனா். இதற்காக ரூ. 82 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்படவேண்டும்.

ஆனால், நெல் விற்பனை செய்து 3 மாதங்கள் ஆகியும் இதுவரை விவசாயிகளுக்கு உரிய தொகை வழங்கப்படவில்லை. இது குறித்து மாவட்ட நிா்வாகத்திடமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் பலமுறை புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, நெல்லுக்கான பணத்தை வழங்க வேண்டும், தோ்தல் நேரத்தில் தவெக அளித்த வாக்குறுதியின்படி, கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்றுள்ள பயிா்க் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஜூன் 15-ஆம் தேதி முதல் திருநெல்வேலி வண்ணாா்பேட்டை செல்லபாண்டியன் பாலத்திற்கு கீழ் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம். அதே இடத்தில் சமையல் செய்து சாப்பிடவும் அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா், திருநெல்வேலி மாநகர காவல் துறை ஆணையா், மாவட்ட கண்காணிப்பாளா் ஆகியோரிடமும் மனு அளித்துள்ளோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.