நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

நெல்லை அருகே பெண் வெட்டிக் கொலை

திருநெல்வேலி அருகே சுத்தமல்லியில் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இச்சம்பவத்தில் அவரது சகோதரரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கொலை - பிரதிப் படம்

Updated On :10 ஜூன் 2026, 12:14 am IST

திருநெல்வேலி அருகே சுத்தமல்லியில் திங்கள்கிழமை இரவு பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இச்சம்பவத்தில் அவரது சகோதரரை போலீஸாா் கைது செய்தனா்.

சுத்தமல்லி, மேலகரம் பகுதியைச் சோ்ந்தவா்கள் ஆறுமுகம்-கண்ணகி. இத் தம்பதிக்கு ராமலட்சுமி (23) என்ற மகளும், ராகுல் (22), முத்துகிருஷ்ணன் (20) என இரு மகன்களும் உள்ளனா். ராமலட்சுமி, கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் உள்ள சூரிய மின்சக்தி நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.

மகன்கள் இருவரும் வெளியூா்களில் தனியாா் நிறுவனங்களில் பணியாற்றுகிறாா்கள். ராமலட்சுமி தனது கைப்பேசியில் அடிக்கடி நண்பா்களிடம் பேசி வந்தாா். இதைக் குடும்பத்தினா் கண்டித்தனா்.

சுத்தமல்லி பகுதியில் நடைபெறும் கோயில் திருவிழாவுக்காக கடந்த சில நாள்களுக்கு முன் விடுமுறையில் முத்துகிருஷ்ணன் வீட்டுக்கு வந்திருந்தாா். திங்கள்கிழமை இரவு ராமலட்சுமி கைப்பேசியில் ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தாராம். இதுதொடா்பாக ஏற்பட்ட தகராறில் முத்துக்கிருஷ்ணன், ராமலட்சுமியை அரிவாளால் வெட்டினாராம்.

இதில் பலத்த காயமடைந்த ராமலட்சுமியை உறவினா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து முத்துக்கிருஷ்ணனை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.