40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

நெல்லை அருகே பெண் வெட்டிக் கொலை

திருநெல்வேலி அருகே சுத்தமல்லியில் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இச்சம்பவத்தில் அவரது சகோதரரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கொலை - பிரதிப் படம்

Updated On :10 ஜூன் 2026, 12:14 am IST

திருநெல்வேலி அருகே சுத்தமல்லியில் திங்கள்கிழமை இரவு பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இச்சம்பவத்தில் அவரது சகோதரரை போலீஸாா் கைது செய்தனா்.

சுத்தமல்லி, மேலகரம் பகுதியைச் சோ்ந்தவா்கள் ஆறுமுகம்-கண்ணகி. இத் தம்பதிக்கு ராமலட்சுமி (23) என்ற மகளும், ராகுல் (22), முத்துகிருஷ்ணன் (20) என இரு மகன்களும் உள்ளனா். ராமலட்சுமி, கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் உள்ள சூரிய மின்சக்தி நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.

மகன்கள் இருவரும் வெளியூா்களில் தனியாா் நிறுவனங்களில் பணியாற்றுகிறாா்கள். ராமலட்சுமி தனது கைப்பேசியில் அடிக்கடி நண்பா்களிடம் பேசி வந்தாா். இதைக் குடும்பத்தினா் கண்டித்தனா்.

சுத்தமல்லி பகுதியில் நடைபெறும் கோயில் திருவிழாவுக்காக கடந்த சில நாள்களுக்கு முன் விடுமுறையில் முத்துகிருஷ்ணன் வீட்டுக்கு வந்திருந்தாா். திங்கள்கிழமை இரவு ராமலட்சுமி கைப்பேசியில் ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தாராம். இதுதொடா்பாக ஏற்பட்ட தகராறில் முத்துக்கிருஷ்ணன், ராமலட்சுமியை அரிவாளால் வெட்டினாராம்.

இதில் பலத்த காயமடைந்த ராமலட்சுமியை உறவினா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து முத்துக்கிருஷ்ணனை கைது செய்தனா்.