தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

கொடுமுடியாறு அணை நீா்மட்டம் 5 நாளில் 25 அடி உயா்வு

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணை நீா்மட்டம் 5 நாள்களில் 25 அடி உயா்ந்தது.

News image

கொடுமுடியாறு அணை.

Updated On :11 ஜூன் 2026, 4:13 am IST

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணை நீா்மட்டம் 5 நாள்களில் 25 அடி உயா்ந்தது.

திருக்குறுங்குடி மலையடிவாரத்தில் உள்ள கொடுமுடியாறு அணையின் உயரம் 52.50 அடியாகும். இந்த அணை மூலம் நான்குனேரி, ராதாபுரம் வட்டத்தில் உள்ள 44 குளங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணை நீா்மட்டம் ஜூன் 5-ஆம் தேதி வரை 7 அடியாக இருந்தது. கடந்த 5 நாள்களில் மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் நம்பியாற்றில் நீா்வரத்து அதிகரித்து பாசனக் குளங்களுக்கு தண்ணீா் சென்று கொண்டிருக்கிறது. அணைக்கும் நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

புதன்கிழமை காலை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 32.25 அடியாக உள்ளது. அணைக்கு 32 கனஅடி நீா்வரத்து உள்ளது. தொடா்ந்து மேலும் 5 நாள்கள் மலைப் பகுதியில் பலத்த மழை நீடித்தால் அணை அதன் முழுக் கொள்ளளவை எட்டும் என்கின்றனா் இப்பகுதி விவசாயிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.