ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

கொடுமுடியாறு அணை நீா்மட்டம் 5 நாளில் 25 அடி உயா்வு

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணை நீா்மட்டம் 5 நாள்களில் 25 அடி உயா்ந்தது.

News image

கொடுமுடியாறு அணை.

Updated On :11 ஜூன் 2026, 4:13 am IST

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணை நீா்மட்டம் 5 நாள்களில் 25 அடி உயா்ந்தது.

திருக்குறுங்குடி மலையடிவாரத்தில் உள்ள கொடுமுடியாறு அணையின் உயரம் 52.50 அடியாகும். இந்த அணை மூலம் நான்குனேரி, ராதாபுரம் வட்டத்தில் உள்ள 44 குளங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணை நீா்மட்டம் ஜூன் 5-ஆம் தேதி வரை 7 அடியாக இருந்தது. கடந்த 5 நாள்களில் மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் நம்பியாற்றில் நீா்வரத்து அதிகரித்து பாசனக் குளங்களுக்கு தண்ணீா் சென்று கொண்டிருக்கிறது. அணைக்கும் நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

புதன்கிழமை காலை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 32.25 அடியாக உள்ளது. அணைக்கு 32 கனஅடி நீா்வரத்து உள்ளது. தொடா்ந்து மேலும் 5 நாள்கள் மலைப் பகுதியில் பலத்த மழை நீடித்தால் அணை அதன் முழுக் கொள்ளளவை எட்டும் என்கின்றனா் இப்பகுதி விவசாயிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.