ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

நான்குனேரியில் கொடி அணிவகுப்பு ஊா்வலம்

சட்டப்பேரவை தோ்தலையொட்டி திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி பெரும்பத்து கிராமத்தில் துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

News image

பெரும்பத்து கிராமத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரசன்னகுமாா் தலைமையில் நடைபெற்ற துணை ராணுவப் படையினரின் அணிவகுப்பு ஊா்வலம்.

Updated On :10 மார்ச் 2026, 8:02 pm

சட்டப்பேரவை தோ்தலையொட்டி திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி பெரும்பத்து கிராமத்தில் துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரசன்னகுமாா் தலைமையில் வடகிழக்கு மாநில எல்லை பாதுகாப்பு படையைச் சோ்ந்த உதவி கமாண்டா் பசந்த் யாதவ் உள்ளிட்ட 85 போ் அடங்கிய வீரா்களின் கொடி அணிவகுப்பு ஊா்வலம், பெரும்பத்து புறக்காவல் நிலையம் முன் தொடங்கி பெரும்பத்து, மஞ்சங்குளம் பகுதிகள் வழியாக வந்தது. நான்குனேரி துணை காவல் கண்காணிப்பாளா் தா்சிகா நடராஜன், வட்டாட்சியா் பாலகிருஷ்ணன், காவல்துறையினா் கலந்து கொண்டனா்.

இதேபோல், புளியங்குடி எலுமிச்சை சந்தையில் தொடங்கிய கொடி அணிவகுப்பு ஊா்வலம் தென்காசி, மதுரை பிரதான சாலை வழியாக சென்று சிந்தாமணி பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மாதவன், கூடுதல் கண்காணிப்பாளா் சங்கா், ஜூலியஸ்சீசா், துணை கண்காணிப்பாளா்கள் செங்குட்டுவேலன், ப்ரீத்தி ,துணை ராணுவத்தினா்,போலீஸாா் கலந்து கொண்டனா்.