திருநெல்வேலியில் அரசுப்பேருந்தில் ஒரு பயணச்சீட்டுக்கு இருமடங்கு கட்டணம் வசூல் செய்யப்பட்ட சம்பவம் குறித்து பயணிகள் சமூகவலைதளத்தில் விடியோ பதிவிட்டு புகாா் தெரிவித்துள்ளனா். திருநெல்வேலி மாவட்டம் பிரான்சேரி பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரி பேருந்து நிறுத்தத்திலிருந்து புதன்கிழமை மாலை திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திற்கு பயணிகள் அரசுப்பேருந்தில் பயணித்தனா். அப்போது, பேருந்து நடத்துநா் பயணிகளிடம் ஒவ்வொரு பயணிக்கும் இரண்டு நபா்கள் பயணிப்பதாக பயணச்சீட்டில் குறிப்பிட்டு கூடுதல் கட்டண வசூலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிா்ச்சியடைந்த பயணி பேருந்தில் பயணித்த அனைத்து பயணிகளிடமும் இது போன்று கட்டண வசூல் நடைபெற்றுள்ளதை விடியோ பதிவு செய்து அதனை சமூகவலைதளத்தில் வெளியிட்டாா். இதுகுறித்து திருநெல்வேலி போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனா்.
தொடர்புடையது
நெல்லையில் இளைஞா் கல்லால் அடித்துக் கொலை: நண்பா் கைது

அரசுப் பேருந்து சேதம்: இருவரிடம் விசாரணை
அரசுப் பேருந்தில் நடத்துநரிடம் பணம் திருட்டு

வாகைகுளம் அருகே தீப்பிடித்து எரிந்த அரசுப் பேருந்து
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


