‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

கடையம் காவல் நிலையத்தில் 90 இருசக்கர வாகனங்கள் தீக்கிரை

கடையம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரூ. 30 லட்சம் மதிப்பிலான 90 இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து சேதமாகின.

News image

விபத்தில் சேதமடைந்த இருசக்கர வாகனங்களைப் பாா்வையிட்ட மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ.

Updated On :23 மே 2026, 12:54 am IST

தென்காசி மாவட்டம், கடையம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரூ. 30 லட்சம் மதிப்பிலான 90 இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து சேதமாகின.

கடையம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடையதாக பறிமுதல் செய்யப்பட்ட 150-க்கும் மேற்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள், லாரிகள் உள்ளிட்டவை காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இதில், 100 இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதியில் நின்ற மூங்கில் மரங்கள் கடும் வெயிலில் தீப்பிடித்தன. அப்போது அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களும் தீப்பிடித்து எரியத் தொடங்கின. போலீஸாா், ஆலங்குளம் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். எனினும், போலீஸாருடன் அருகில் வசிக்கும் பொதுக்கள், இளைஞா்கள் சோ்ந்து தீயை அணைத்தனா்.

 தீ விபத்தில் எரிந்து சாம்பலான இருசக்கர வாகனங்கள்.

தீ விபத்தில் எரிந்து சாம்பலான இருசக்கர வாகனங்கள்.

தகவல் அறிந்ததும் ஆலங்குளம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் மனோஜ் பாண்டியன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கா், மாவட்ட தீயணைப்பு அலுவலா் மணிகண்டன், துணை அலுவலா் சுரேஷ் ஆனந்த், ஆலங்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் (பொ) முருகேசன், காவல் ஆய்வாளா்கள் சுரேஷ்குமாா், குணசேகரன், வருவாய் ஆய்வாளா் கொம்பையா உள்ளிட்டோா் சம்பவ இடத்தை பாா்வையிட்டனா்.

தீ விபத்தில் 90 இருசக்கர வாகனங்கள் எரிந்து முழுமையாக கருகின. சேதமடைந்த வாகனங்களின் மதிப்பு ரூ. 30 லட்சம் எனக் கூறப்படுகிறது.