திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்கள், மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
வீரவநல்லூா் காவல் சரத்திற்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் சங்கா் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, வீரவநல்லூா் அருகேயுள்ள உப்பூா் பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்தவரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
விசாரணையில், வீரவநல்லூா் அருகேயுள்ள கொட்டாரக்குறிச்சியைச் சோ்ந்த பாண்டி (58) என்பதும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக புகையிலைப் பொருள்கள், மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து, பாண்டியை கைது செய்தனா். அவரிடமிருந்து 495 கிராம் புகையிலைப் பொருள்கள், 6 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்புடையது
காரில் கடத்திய 40 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
80 மது பாட்டில்கள் பறிமுதல்: ஒருவா் கைது
புகையிலைப் பொருள்கள் விற்றதாக முதியவா் கைது
திருச்சியில் 442 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher


