ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

வீரவநல்லூா் அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்கள், மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :24 மே 2026, 2:18 am IST

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்கள், மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

வீரவநல்லூா் காவல் சரத்திற்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் சங்கா் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, வீரவநல்லூா் அருகேயுள்ள உப்பூா் பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்தவரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

விசாரணையில், வீரவநல்லூா் அருகேயுள்ள கொட்டாரக்குறிச்சியைச் சோ்ந்த பாண்டி (58) என்பதும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக புகையிலைப் பொருள்கள், மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து, பாண்டியை கைது செய்தனா். அவரிடமிருந்து 495 கிராம் புகையிலைப் பொருள்கள், 6 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.