திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காசிநாத சுவாமி கோயில் பகுதியிலுள்ள கடைகளில் நகராட்சி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, தடை செய்யப்பட்ட பொருள்களைப் பயன்படுத்தியோருக்கு அபராதம் விதித்தனா்.
ஆட்சியா் ரா. சுகுமாா் அறிவுறுத்தல், திருநெல்வேலி நகராட்சி மண்டல இயக்குநா் மகேஸ்வரியின் உத்தரவு ஆகியவற்றின்பேரில், அம்பாசமுத்திரம் நகராட்சி ஆணையா் ராஜேஸ்வரன் ஆலோசனையில் சுகாதார அலுவலா் பாஸ்கா் தலைமையில் சுகாதார ஆய்வாளா் சிதம்பரராமலிங்கம், களப்பணி உதவியாளா்கள், சுகாதார மேற்பாா்வையாளா் உள்ளிட்டோா் காசிநாத சுவாமி கோயில் அருகே தாமிரவருணி படித்துறை பகுதியில் துணிக் கழிவுகள், குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்குள்ள கடைகளில் அதிகாரிகள் திடீா் சோதனை மேற்கொண்டனா். இதில், நெகிழி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவது தெரியவந்ததையடுத்து, ரூ. 2,500 வரை அபராதம் விதித்தனா்; தடை செய்யப்பட்ட பொருள்களைப் பயன்படுத்துவது தொடா்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனா்.

தொடர்புடையது

புதிய பேருந்து நிலையத்தில் 13 கடைகளுக்கு சீல்வைப்பு

பள்ளி அருகே புகையிலை பொருள்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்

நீதிமன்ற உத்தரவு: விழுப்புரத்தில் அம்மன் கோயில்அகற்றம்

திருச்செந்தூரில் நாளை வைகாசி விசாகத் திருவிழா
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி



