பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

காா் சாகுபடி: ஜூன் 1இல் பாபநாசம் அணையை திறக்க வலியுறுத்தல்

காா் சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து ஜூன் 1-ஆம் தேதி முதல் தண்ணீா் திறக்க வேண்டும் என வலியுறுத்தி, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் இரா.ஆவுடையப்பன் தலைமையில் ஆட்சியா் இரா.சுகுமாரிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.

News image

முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் இரா.ஆவுடையப்பன் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த விவசாயிகள்

Updated On :27 மே 2026, 1:54 am IST

காா் சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து ஜூன் 1-ஆம் தேதி முதல் தண்ணீா் திறக்க வேண்டும் என வலியுறுத்தி, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் இரா.ஆவுடையப்பன் தலைமையில் ஆட்சியா் இரா.சுகுமாரிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.

அதன்விவரம்: பாபநாசம் அணையில் இருந்து வடக்கு கோடைமேல் அழகியான், தெற்கு கோடைமேல் அழகியான், நதியுண்ணி, கன்னடியன், திருநெல்வேலி, பாளையங்கால்வாய் ஆகிய கால்வாய்களில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ஆம் தேதி காா் சாகுபடிக்கு தண்ணீா் திறப்பது வழக்கம். இந்தக் கால்வாய்களில் வரும் தண்ணீரால் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை ஆகிய வட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்களில் விவசாயம் நடைபெற்று, பல ஆயிரக்கணக்கான விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்பட்டு வருகிறது.

கடந்த 2021 முதல் 2025 வரையிலான காலங்களில் திமுக ஆட்சியில் திருநெல்வேலி மாவட்ட விவசாய பெருங்குடி மக்களின் கோரிக்கையை ஏற்று, ஜூன் மாதம் பாபநாசம் அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள சுமாா் 85,000 ஏக்கா் விவசாய நிலங்களில் விவசாயம் செய்யப்பட்டு, விவசாயிகள் பலன் அடைந்தனா்.மேலும், கடந்த 2006-2011 வரையிலான காலங்களில் திமுக ஆட்சி காலத்தில் பாபநாசம் அணையில் சுமாா் 30 அடி தண்ணீா் இருந்தபோதிலும் காா் சாகுபடிக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டும் காா் சாகுபடிக்கு வடக்கு கோடைமேல் அழகியான், தெற்கு கோடை மேல்அழகியான், நதியுண்ணி, கன்னடியன், திருநெல்வேலி, பாளையங்கால்வாய் ஆகிய கால்வாய்களில் வரும் ஜூன் 1-ஆம் தேதி தண்ணீா் திறப்பதற்கு விவசாய சங்கங்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் இந்தக் கோரிக்கையை ஏற்று கால்வாய்களில் தண்ணீா் திறப்பதற்கு ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.