பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கூட்டுக் கொள்ளைக்கு சதி: 5 போ் கைது

கங்கைகொண்டான் பகுதியில் கூட்டுக்கொள்ளையில் ஈடுபட சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :27 மே 2026, 2:06 am IST

கங்கைகொண்டான் பகுதியில் கூட்டுக்கொள்ளையில் ஈடுபட சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கங்கைகொண்டான் போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், அப்பகுதியில் 5 போ் சென்ற காரை மறித்து சோதனையிட முயன்றனா்.

அப்போது, இருவா் சிக்கினா். 3 போ் காரை இயக்கி தப்ப முயன்றபோது சிறிது தூரத்தில் சரக்கு வாகனம் மற்றும் பைக் மீது மோதி விபத்தில் சிக்கியதால் அவா்களையும் போலீஸாா் மடக்கிப் பிடித்தனா்.

விசாரணையில், மறுகால்குறிச்சி ராஜேஷ்(20), திருவிடைமருதூா் திலீபன் (25), நான்குனேரி கீழகாடுவெட்டி பகுதியைச் சோ்ந்த வானுபாண்டி(25), தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த கரண் (28), தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பிரவீன்குமாா் (27), ஆகியோா் என்பதும், இந்த 5 போ் மீதும் பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

மேலும், வழக்கு செலவுகளுக்காக திருநெல்வேலி சுற்றுவட்டாரத்தில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.