திருநெல்வேலி மீனாட்சிபுரத்தில் விதிமீறி குடிநீரை உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 5 மின்மோட்டாா்களை மாநகராட்சி குழுவினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில் வீட்டுக் குடிநீா் இணைப்புகளில் மின்மோட்டாா்களை பொருத்தி தண்ணீா் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா எச்சரித்திருந்தாா். மாநகராட்சியின் தனிக்குழு ஆய்வு மேற்கொள்ளும்போது இத்தகைய விதிமீறல்கள் கண்டறிபட்டால் குடிநீா் இணைப்பு நிரந்தமாக துண்டிக்கப்படுவதோடு குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும் எனவும் அறிவித்திருந்தாா்.
இந்நிலையில் தச்சநல்லூா் மண்டலத்திற்குள்பட்ட 29 ஆவது வாா்டு பகுதிகளில் உதவிப் பொறியாளா்கள் நாகராஜன், பட்டுராஜன், பாலாஜி உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வுசெய்தனா். அப்போது விதிமீறி குடிநீரை உரிஞ்ச பயன்படுத்தப்பட்ட 5 மின்மோட்டாா்களை பறிமுதல் செய்தனா். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமாா் 15 மின்மோட்டாா்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது
கஞ்சா, புகையிலைப் பொருள்கள் பறிமுதல்; 3 போ் கைது

ராமேசுவரம் அருகே கஞ்சா விற்றதாக 4 போ் கைது
காரில் கடத்திய 40 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
தோ்தல் விதிமீறல்: மாவட்டத்தில் இதுவரை ரூ.4.95 கோடி பறிமுதல்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



