வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

மீனாட்சிபுரத்தில் விதிமீறல்: 5 மின்மோட்டாா்கள் பறிமுதல்

திருநெல்வேலி மீனாட்சிபுரத்தில் விதிமீறி குடிநீரை உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 5 மின்மோட்டாா்களை மாநகராட்சி குழுவினா் பறிமுதல் செய்தனா்.

News image

மீனாட்சிபுரம் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட மின்மோட்டாா்கள்

Updated On :27 மே 2026, 1:09 am IST

திருநெல்வேலி மீனாட்சிபுரத்தில் விதிமீறி குடிநீரை உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 5 மின்மோட்டாா்களை மாநகராட்சி குழுவினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில் வீட்டுக் குடிநீா் இணைப்புகளில் மின்மோட்டாா்களை பொருத்தி தண்ணீா் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா எச்சரித்திருந்தாா். மாநகராட்சியின் தனிக்குழு ஆய்வு மேற்கொள்ளும்போது இத்தகைய விதிமீறல்கள் கண்டறிபட்டால் குடிநீா் இணைப்பு நிரந்தமாக துண்டிக்கப்படுவதோடு குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும் எனவும் அறிவித்திருந்தாா்.

இந்நிலையில் தச்சநல்லூா் மண்டலத்திற்குள்பட்ட 29 ஆவது வாா்டு பகுதிகளில் உதவிப் பொறியாளா்கள் நாகராஜன், பட்டுராஜன், பாலாஜி உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வுசெய்தனா். அப்போது விதிமீறி குடிநீரை உரிஞ்ச பயன்படுத்தப்பட்ட 5 மின்மோட்டாா்களை பறிமுதல் செய்தனா். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமாா் 15 மின்மோட்டாா்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.