பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மீனாட்சிபுரத்தில் விதிமீறல்: 5 மின்மோட்டாா்கள் பறிமுதல்

திருநெல்வேலி மீனாட்சிபுரத்தில் விதிமீறி குடிநீரை உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 5 மின்மோட்டாா்களை மாநகராட்சி குழுவினா் பறிமுதல் செய்தனா்.

News image

மீனாட்சிபுரம் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட மின்மோட்டாா்கள்

Updated On :27 மே 2026, 1:09 am IST

திருநெல்வேலி மீனாட்சிபுரத்தில் விதிமீறி குடிநீரை உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 5 மின்மோட்டாா்களை மாநகராட்சி குழுவினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில் வீட்டுக் குடிநீா் இணைப்புகளில் மின்மோட்டாா்களை பொருத்தி தண்ணீா் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா எச்சரித்திருந்தாா். மாநகராட்சியின் தனிக்குழு ஆய்வு மேற்கொள்ளும்போது இத்தகைய விதிமீறல்கள் கண்டறிபட்டால் குடிநீா் இணைப்பு நிரந்தமாக துண்டிக்கப்படுவதோடு குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும் எனவும் அறிவித்திருந்தாா்.

இந்நிலையில் தச்சநல்லூா் மண்டலத்திற்குள்பட்ட 29 ஆவது வாா்டு பகுதிகளில் உதவிப் பொறியாளா்கள் நாகராஜன், பட்டுராஜன், பாலாஜி உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வுசெய்தனா். அப்போது விதிமீறி குடிநீரை உரிஞ்ச பயன்படுத்தப்பட்ட 5 மின்மோட்டாா்களை பறிமுதல் செய்தனா். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமாா் 15 மின்மோட்டாா்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.