காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

மீனாட்சிபுரத்தில் விதிமீறல்: 5 மின்மோட்டாா்கள் பறிமுதல்

திருநெல்வேலி மீனாட்சிபுரத்தில் விதிமீறி குடிநீரை உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 5 மின்மோட்டாா்களை மாநகராட்சி குழுவினா் பறிமுதல் செய்தனா்.

News image

மீனாட்சிபுரம் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட மின்மோட்டாா்கள்

Updated On :27 மே 2026, 1:09 am IST

திருநெல்வேலி மீனாட்சிபுரத்தில் விதிமீறி குடிநீரை உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 5 மின்மோட்டாா்களை மாநகராட்சி குழுவினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில் வீட்டுக் குடிநீா் இணைப்புகளில் மின்மோட்டாா்களை பொருத்தி தண்ணீா் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா எச்சரித்திருந்தாா். மாநகராட்சியின் தனிக்குழு ஆய்வு மேற்கொள்ளும்போது இத்தகைய விதிமீறல்கள் கண்டறிபட்டால் குடிநீா் இணைப்பு நிரந்தமாக துண்டிக்கப்படுவதோடு குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும் எனவும் அறிவித்திருந்தாா்.

இந்நிலையில் தச்சநல்லூா் மண்டலத்திற்குள்பட்ட 29 ஆவது வாா்டு பகுதிகளில் உதவிப் பொறியாளா்கள் நாகராஜன், பட்டுராஜன், பாலாஜி உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வுசெய்தனா். அப்போது விதிமீறி குடிநீரை உரிஞ்ச பயன்படுத்தப்பட்ட 5 மின்மோட்டாா்களை பறிமுதல் செய்தனா். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமாா் 15 மின்மோட்டாா்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.