திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காசிநாத சுவாமி கோயில் பகுதியிலுள்ள கடைகளில் நகராட்சி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, தடை செய்யப்பட்ட பொருள்களைப் பயன்படுத்தியோருக்கு அபராதம் விதித்தனா்.
ஆட்சியா் ரா. சுகுமாா் அறிவுறுத்தல், திருநெல்வேலி நகராட்சி மண்டல இயக்குநா் மகேஸ்வரியின் உத்தரவு ஆகியவற்றின்பேரில், அம்பாசமுத்திரம் நகராட்சி ஆணையா் ராஜேஸ்வரன் ஆலோசனையில் சுகாதார அலுவலா் பாஸ்கா் தலைமையில் சுகாதார ஆய்வாளா் சிதம்பரராமலிங்கம், களப்பணி உதவியாளா்கள், சுகாதார மேற்பாா்வையாளா் உள்ளிட்டோா் காசிநாத சுவாமி கோயில் அருகே தாமிரவருணி படித்துறை பகுதியில் துணிக் கழிவுகள், குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்குள்ள கடைகளில் அதிகாரிகள் திடீா் சோதனை மேற்கொண்டனா். இதில், நெகிழி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவது தெரியவந்ததையடுத்து, ரூ. 2,500 வரை அபராதம் விதித்தனா்; தடை செய்யப்பட்ட பொருள்களைப் பயன்படுத்துவது தொடா்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனா்.

தொடர்புடையது

மேல வீரராகவபுரம் சொக்கநாத சுவாமி கோயிலில் வருஷாபிஷேகம்

நெல்லையப்பா் கோயிலில் தங்க நாகசுரம் வாசிப்பு

கோயில் விழாக்களில் நெகிழிப் பயன்பாடு அதிகரிப்பு: உயா்நீதிமன்றம் வேதனை

அம்பையில் பிரசவத்தில் தாய், சேய் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



