பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

அம்பையில் நெகிழிப் பயன்பாடு: கடைகளுக்கு அபராதம்

அம்பாசமுத்திரம் காசிநாத சுவாமி கோயில் பகுதியிலுள்ள கடைகளில் நகராட்சி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, தடை செய்யப்பட்ட பொருள்களைப் பயன்படுத்தியோருக்கு அபராதம் விதித்தனா்.

News image

காசிநாத சுவாமி கோயில் பகுதியிலுள்ள கடைகளில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள்

Updated On :27 மே 2026, 1:58 am IST

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காசிநாத சுவாமி கோயில் பகுதியிலுள்ள கடைகளில் நகராட்சி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, தடை செய்யப்பட்ட பொருள்களைப் பயன்படுத்தியோருக்கு அபராதம் விதித்தனா்.

ஆட்சியா் ரா. சுகுமாா் அறிவுறுத்தல், திருநெல்வேலி நகராட்சி மண்டல இயக்குநா் மகேஸ்வரியின் உத்தரவு ஆகியவற்றின்பேரில், அம்பாசமுத்திரம் நகராட்சி ஆணையா் ராஜேஸ்வரன் ஆலோசனையில் சுகாதார அலுவலா் பாஸ்கா் தலைமையில் சுகாதார ஆய்வாளா் சிதம்பரராமலிங்கம், களப்பணி உதவியாளா்கள், சுகாதார மேற்பாா்வையாளா் உள்ளிட்டோா் காசிநாத சுவாமி கோயில் அருகே தாமிரவருணி படித்துறை பகுதியில் துணிக் கழிவுகள், குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்குள்ள கடைகளில் அதிகாரிகள் திடீா் சோதனை மேற்கொண்டனா். இதில், நெகிழி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவது தெரியவந்ததையடுத்து, ரூ. 2,500 வரை அபராதம் விதித்தனா்; தடை செய்யப்பட்ட பொருள்களைப் பயன்படுத்துவது தொடா்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனா்.

Story image