ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கிணற்றில் மிதந்த மூதாட்டி சடலம் மீட்பு

கயத்தாறு அருகே கிணற்றில் மிதந்த மூதாட்டியின் சடலத்தை

News image
Updated On :3 அக்டோபர் 2012, 12:03 pm

dinamani

கயத்தாறு அருகே கிணற்றில் மிதந்த மூதாட்டியின் சடலத்தை அப்பகுதி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.

 கயத்தாறையடுத்த வெள்ளாளங்கோட்டை கிழக்குப் பகுதியில் உள்ள தோட்டத்துக் கிணற்றில் மூதாட்டியின் சடலம் ஒன்று மிதப்பதாக அப்பகுதி பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது.

 அதனையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் கிணற்றுக்குச் சென்று பார்த்த போது, சடலம் ஒன்று மிதப்பது தெரியவந்தது. இதுகுறித்து கயத்தாறு போலீஸôருக்கும் தகவல் தெரிவித்தனர்.

 போலீஸôர் முன்னிலையில், அப்பகுதி பொதுமக்கள் கிணற்றில் மிதந்த சடலத்தை மீட்டனர். விசாரணையில் அவர், வெள்ளாளங்கோட்டையைச் சேர்ந்த கருப்பண்ணன் மனைவி குருவம்மாள்(60) என்பது தெரியவந்தது. இவரது கணவர் கருப்பண்ணன் ஏற்கெனவே இறந்துவிட்டார். இவருக்கு 4 மகள்களும், 3 மகன்களும் உள்ளனர்.

 இவர் கிணற்றில் தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா அல்லது சாவில் ஏதேனும் மர்ம உள்ளதா என்பது குறித்து கயத்தாறு போலீஸôர் வழக்குப் பதிந்து, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.