கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் கல்லூரி மற்றும் இயந்திரவியல் பொறியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் 3 நாள் நடைபெறும் சர்வதேச கருத்தரங்கு திங்கள்கிழமை தொடங்குகிறது.
கல்லூரி வளாகத்தில் நடைபெறும் உலோகப் பொருள் ஆக்க நுட்பத்தின் இப்போதைய முன்னேற்றங்கள் என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கு தொடக்க விழா நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவர் கே.ராமசாமி தலைமை வகிக்கிறார். கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர் கே.ஆர்.அருணாசலம், கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம், முதல்வர் சுப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானியும், இயக்குநருமான எஸ்.சி.சேத்தல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.