அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தூத்துக்குடியில் ரூ. 29.15 கோடியில் கட்டப்பட்ட குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகள்: காணொலிக் காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

தூத்துக்குடியில் குடிசை மாற்று வாரியம் மூலம் ரூ. 29.15 கோடியில் கட்டப்பட்ட 444 குடியிருப்புகளை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தார்.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 12:55 am

DIN

தூத்துக்குடியில் குடிசை மாற்று வாரியம் மூலம் ரூ. 29.15 கோடியில் கட்டப்பட்ட 444 குடியிருப்புகளை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தார்.
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம், தூத்துக்குடி மாநகரில் உள்ள பக்கிள்ஓடை,  சாலையோரங்கள் போன்ற ஆட்சேபகரமான பகுதிகளில் அடிப்படை வசதிகளின்றி சுகாதாரமற்ற சூழ்நிலையில் குடிசைப்பகுதிகளில் வாழ்ந்து வரும் 444 குடும்பங்களை மறுகுடியமர்வு செய்ய ராஜீவ் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் மாப்பிள்ளையூரணி- ராஜீவ்காந்திநகர் திட்டப்பகுதியில் 5.12  ஏக்கர் நிலப் பரப்பளவில் ரூ.29.15 கோடி செலவில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.
குடிசைப்பகுதி மாற்று வாரிய வீடுகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி  காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தார்.
குடியிருப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ், முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பி.டி.ஆர். ராஜகோபால், மேற்பார்வை பொறியாளர் சேதுபதி, செயற்பொறியாளர் எஸ். எட்வின் சாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தரைத்தளம் மற்றும் இரண்டு அடுக்கு கட்டடத்தில் 444 குடியிருப்புகள் 37 கட்டட தொகுப்புகளாக, ஒரு வீடு தலா 341 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடியிருப்பிலும் பல்நோக்கு அறை,  படுக்கை அறை, சமையல் அறை,  பால்கனி,  குளியலறை மற்றும் கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தார்ச்சாலை,  மழைநீர் வடிகால், கழிவுநீர் செல்லும் வசதி, தண்ணீர் சேகரிக்கும் தொட்டி,  பூங்கா, அங்கன்வாடி வசதிகள்,  மழைநீர் சேகரிக்கும் அமைப்பு, குப்பை சேகரிப்பு தொட்டி மற்றும் தெரு விளக்குகள் போன்ற அனைத்து வசதிகளுடன் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.