/
மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இலவச எரிவாயு உருளை இணைப்பு வழங்கும் நிகழ்வு காயாமொழி அருகே நல்லூரில் நடைபெற்றது.
பாஜக கிளைத் தலைவர் ஏ.மணி தலைமை வகித்தார். கிளை நிர்வாகிகள் கரண், சோமசுந்தரி ஆகியோ ர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக பாஜக மாவட்ட மகளிரணிச் செயலர் கு.நெல்லையம்மாள் பங்கேற்று 25 பேருக்கு இலவச எரிவாயு உருளை இணைப்புகளை வழங்கிப் பேசினார். இதில், பாஜக நகர நிர்வாகிகள் திருநாவுக்கரசு, சுந்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








