தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் கூட்டம்

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் தூத்துக்குடியில்   நடைபெற்றது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:51 am

DIN

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் தூத்துக்குடியில்   நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, அமைப்பின் மாநிலத் தலைவர் மூ. மணிமேகலை தலைமை வகித்தார். பொருளாளர் ஜோதிபாபு, மாவட்டச் செயலர் சு. செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலர் ச. மயில் பேசுகையில், சென்னையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் மே 8 ஆம் தேதி நடைபெறும் தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டத்தில் அதிகளவில் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தினார்.
 இதில், ஆசிரியர் கூட்டணி மாநில துணைப் பொதுச்செயலர் கணேசன், எஸ்டிஎப்ஐ அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் மோசஸ், தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பவுல் ஆபிரகாம் அந்தோணிராஜ், பொருளாளர் பாப்ஹையஸ், மாநில செயற்குழு உறுப்பினர் ரவீந்திரராஜன் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.