பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

பைக்குகள் மோதல்: இருவர் சாவு

கோவில்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் கட்டடத் தொழிலாளிகள் இருவர் இறந்தார். 

Updated On :23 ஜூலை 2018, 8:00 am IST

கோவில்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் கட்டடத் தொழிலாளிகள் இருவர் இறந்தார். 
கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோயில் தெரு சண்முகா நகரைச் சேர்ந்தவர் மூக்கையா மகன் கட்டடத் தொழிலாளி செல்வராஜ் (36). இவரது உறவினர் கருப்பசாமி மகன் கட்டடத் தொழிலாளி ஆதிராம் (25). இவர்கள் இருவரும் தனித்தனியாக பைக்குகளில் மந்தித்தோப்பு கெச்சிலாபுரம் விலக்கு அருகே கொடை விழாவிற்காக ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சென்று கொண்டிருந்தார்களாம். 
குருமலை சாலை மயானம் அருகே  சென்று கொண்டிருந்த போது எதிரே 3 பேருடன் பைக்கை ஓட்டி வந்த ஊத்துப்பட்டி ஆர்.சி தெருவைச் சேர்ந்த கலைச்செல்வன் மகன் கட்டடத் தொழிலாளி ஜனார்த்தனபாண்டி (18) ஓட்டி வந்த பைக்கும், ஆதிராம் ஓட்டி வந்த பைக்கும் நேருக்குநேர் மோதின. 
இதில் ஆதிராம், ஜனார்த்தனபாண்டி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு இருவரும் இறந்தனர்.
இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.