கோவில்பட்டி அருகே முன்விரோதம் காரணமாக நிலத்தரகரை தாக்கிய மற்றொரு நிலத்தரகரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கோவில்பட்டி போஸ் நகரைச் சேர்ந்த துரைச்சாமி மகன் நிலத்தரகர் முனியசாமி(55). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நாலாட்டின்புத்தூரில் உள்ள விவசாய நிலத்தை விலைக்கு வாங்கியிருந்தாராம். இதனால், இவருக்கும், சண்முகசிகாமணி நகரைச் சேர்ந்த செல்லையா மகன் நிலத்தரகர் சேகருக்கும் (50) இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில் முனியாசமி தனது நண்பர்களான ராமையாபாண்டியன், பாண்டியராஜன் ஆகியோருடன் பாண்டவர்மங்கலம் ராஜீவ் நகரில் உள்ள ஒரு இடத்தைப் பார்த்துவிட்டு, பசுவந்தனை சாலையில் உள்ள கறிக்கடை முன் நின்று கொண்டிருந்தனராம்.
அப்போது, பைக்கில் வந்த சேகர், முனியசாமியிடம் தகராறு செய்து அவரை தாக்கினாராம். இதில் காயமடைந்த முனியசாமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்த போலீஸார் நிலத்தரகர் சேகரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அட்டகாசமான வேலைவாய்ப்பு அறிவிப்பு... எய்ம்ஸ் நிறுவனத்தில் 2218 நர்சிங் அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

சி.வி. சண்முகம் விடுத்த சவால்! ஏற்பாரா எடப்பாடி பழனிசாமி?

கேலி பண்றீங்களா? எனக்கு இப்படித்தான் பேசத் தெரியும்! கோபமடைந்த அமைச்சர் மரியவில்சன்!

கடற்கரைகளில் இலவச வைஃபை வசதி! சென்னை மாநகராட்சி திட்டம்
விடியோக்கள்

சி.வி. சண்முகம் விடுத்த சவால்! ஏற்பாரா எடப்பாடி பழனிசாமி?


