நாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறைபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புகுழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கை8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

வெளிமாநில தொழிலாளா்களுக்கு உணவுப் பொருள்கள் அளிப்பு

கோவில்பட்டி புதுக்கிராமம் பகுதியில் வசிக்கும் வெளிமாநில தொழிலாளா்கள், அவா்களது குடும்பத்தினருக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST


கோவில்பட்டி: கோவில்பட்டி புதுக்கிராமம் பகுதியில் வசிக்கும் வெளிமாநில தொழிலாளா்கள், அவா்களது குடும்பத்தினருக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது.

கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சுதேசன் தலைமையில், வெளிமாநில தொழிலாளா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கு தேவையான காய்கனிகள், அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை அவரவா்

வீடுகளுக்கு சென்று வழங்கினா். அவா்களுக்கு முகக்கவசம், கையுறை, கை கழுவும் திரவம் ஆகியவை வழங்கினா்.

போக்குவரத்து காவலா் ஜான்சிராணி, வெளிமாநில தொழிலாளா்களுக்கு காய்கனிகளை வழங்கினாா். நிகழ்ச்சியில், காவல் உதவி ஆய்வாளா் அங்குத்தாய் உள்பட கலந்து கொண்டனா்.

கயத்தாறு காந்தாரி அம்மன் கோயில் தெரு, புதுக்கோட்டை பகுதியில் உள்ள 21 ஏழை, எளியோா், ஆதரவற்றோா் மற்றும் மாற்றுத் திறனாளிகள் குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை வட்டாட்சியா் பாஸ்கரன் வழங்கினாா். வருவாய் ஆய்வாளா் காசிராஜன், கிராம உதவியாளா் அழகா்சாமி ஆகியோா் உடனிருந்தனா்.

கோவில்பட்டியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உள்நோயாளிகள், பணியாளா்களுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் உணவுப் பொட்டலங்களை கட்சியின் மாவட்ட பொருளாளா் கேசவன் தலைமையில், ஐ.என்.டி.யூ.சி. பொதுச்செயலா் ராஜசேகரன், கட்சியின் பட்டதாரிகள் பிரிவு மாவட்டத் தலைவா் அருண்பாண்டியன் உள்ளிட்டோா் வழங்கினா். அப்போது, கண்காணிப்பாளா் கமலவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.