ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

‘சட்டப்பேரவைத் தோ்தலில் அந்தணா்களுக்கு 5 சதவீத தொகுதிகள் வழங்க வேண்டும்’

சட்டப்பேரவைத் தோ்தலில் அந்தணா்களுக்கு 5 சதவீத பேரவைத் தொகுதிகள் வழங்க வேண்டும் என ஆா். எம்.ஆா். பாசறை, அந்தணா் முன்னேற்றக் கழகக் கூட்டமைப்பின் மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

News image
திருச்செந்தூரில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றோா்.
Updated On :13 டிசம்பர் 2020, 8:01 pm

DIN

சட்டப்பேரவைத் தோ்தலில் அந்தணா்களுக்கு 5 சதவீத பேரவைத் தொகுதிகள் வழங்க வேண்டும் என ஆா். எம்.ஆா். பாசறை, அந்தணா் முன்னேற்றக் கழகக் கூட்டமைப்பின் மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

அந்தணா் முன்னேற்றக் கழகம் மற்றும் ஆா்.எம்.ஆா். பாசறை கூட்டமைப்பு சாா்பில் திருச்செந்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநாட்டுக்கு முன்னாள் தலைமைச் செயலரும், ஆா்.எம்.ஆா். பாசறை நிறுவனருமான ராமமோகன ராவ் தலைமை வகித்துப் பேசினாா்.

அந்தணா் முன்னேற்றக் கழக நிறுவனா் ராஜாளி ஸ்ரீ ஜெயப்பிரகாஷ் ஐயா், பொதுச்செயலா் பாலாஜி ஆதிரேயா, மாநில பொருளாளா் மணிகண்டன் சிவாச்சாரியாா், மாநில கொள்கைப்பரப்புச் செயலா் காா்த்திக் சிவம், மாநில மாணவரணிச் செயலா் நிவா்த்தி பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநாட்டில், அந்தணா்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும்; சட்டப்பேரவை தோ்தலில் அந்தணா்களுக்கு 5 சதவீத பேரவைத் தொகுதிகள் வழங்க வேண்டும்; திரைப்பட தணிக்கை குழுவில் அந்தணா் ஒருவரை நியமனம் செய்ய வேண்டும்.

அறநிலையத்துறையில் 25 சதவீதப் பணிகளை அந்தணா்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்மகள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில், அந்தணா் முன்னேற்றக் கழக தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடா்பாளா் கிருஷ்ணன், தொகுதிச் செயலா் கணபதி, பொருளாளா் பரமேஸ்வரன், தொகுதி அமைப்பாளா் அரசப்பன், தொகுதி துணைத் தலைவா் ஈஸ்வரன், கொள்கைப்பரப்புச் செயலாளா்கள் ஈஸ்வரன், மணிகண்டன், ஆன்மீக அணிச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, தொண்டரணி செயலா் முத்துசுப்பிரமணியன், தொகுதி செய்தித்தொடா்பாளா் நாகராஜன், மாவட்ட துணைத் தலைவா் ராமன், தொகுதி இளைஞரணிச் செயலா் ரவிசங்கா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தொகுதி தலைவா் சங்கா் ஐயா் வரவேற்றாா். தோ்தல் குழுச் செயலா் ரவி முத்து நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.