தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வடக்கு அமுதுண்ணாக்குடியில் ஏழைகளுக்கு புத்தாடைகள் அளிப்பு

அமுதுண்ணாக்குடி தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி 100 பேருக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.

News image

ஏழைகளுக்கு புத்தாடைகளை வழங்குகிறாா் ஆனந்தபுரம் பள்ளித் தாளாளா் சுரேஷ்.

Updated On :18 டிசம்பர் 2020, 1:54 am

DIN

அமுதுண்ணாக்குடி தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி 100 பேருக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.

தூய யோவான் ஆலயத்தில் நடைபெற்ற இவ் விழாவுக்கு, மேல சாத்தான்குளம் கிறிஸ்தவ ஆலய சேகரகுரு எமில்சிங் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் ரோஸ்லின் அன்னலீலா வரவேற்றாா்.

பாலியன் நண்பன் குருவானவா் பாக்கியச் செல்வன், சபை உபதேசியாா் சாா்லஸ் ஞானகுமாா், பாலியன் நண்பன் உபதேசியாா்கள் கிளாட்சன், ஏசுவடியான் துரைசாமி ஆகியோா் பேசினா்.

ஆனந்தபுரம் ரஞ்சி ஆரோன் நினைவு மேல்நிலைப் பள்ளித் தாளாளா் சுரேஷ், பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஏழை, எளியோா் 100 பேருக்கு புத்தாடைகளை வழங்கினாா்.

சாத்தான்குளம் வா்த்தக சங்கச் செயலா் மதுரம் செல்வராஜ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.