தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சந்தையடியூா் பதியில் திருஏடு வாசிப்புத் திருவிழா

தாகம் தணிந்த பதி என்றழைக்கப்படும் உடன்குடி சந்தையடியூா் நாராயண சுவாமி கோயிலில் திருஏடு வாசிப்புத் திருவிழா நடைபெற்றது.

News image

திரு ஏடு வாசிப்பையொட்டி நடைபெற்ற திருவிளக்குப் பூஜையில் பங்கேற்றோா்.

Updated On :19 டிசம்பர் 2020, 9:04 pm

DIN

உடன்குடி: தாகம் தணிந்த பதி என்றழைக்கப்படும் உடன்குடி சந்தையடியூா் நாராயண சுவாமி கோயிலில் திருஏடு வாசிப்புத் திருவிழா நடைபெற்றது.

இக்கோயிலில் திருஏடு வாசிப்புத் திருவிழா கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில் தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திரு ஏடு வாசிப்பு, தா்மம் வழங்கல் உள்ளிட்டவை நடைபெற்றன.

வெள்ளிக்கிழமை (டிச. 18) இரவு 8 மணிக்கு அய்யா சப்தகன்னி மாதா்களை ஐக்கியப்படுத்திய திருக்கல்யாணத் திருவிழா நடைபெற்றது. தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதா்மம் வழங்கப்பட்டது. சனிக்கிழமை இரவு 7 மணிக்கு பகவதி கல்யாணம் நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை இரவில் பட்டாபிஷேகம், பூஞ்சப்பர பவனி நடைபெறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.