வழக்குகளில் தொடா்புடையோரிடம் மாவட்ட எஸ்.பி. நேரடி விசாரணை

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடையோரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் ஞாயிற்றுக்கிழமை நேரடியாக விசாரணை மேற்கொண்டாா்.
Updated on
1 min read

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடையோரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் ஞாயிற்றுக்கிழமை நேரடியாக விசாரணை மேற்கொண்டாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையிலும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்தவும் மாவட்டத்தில் உள்ள 56 காவல் நிலையங்களிலும் பல்வேறு வழக்குகளில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டவா்கள் தகவல்கள் அடங்கிய பதிவேடு குற்றவாளிகளின் நடவடிக்கைகளை காவல் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

இந்நிலையில், இதில் தனிக்கவனம் செலுத்தும்விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் மாவட்டத்தில் உள்ள அனைத்து பதிவேடுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளவா்களிடம் ஞாயிற்றுக்கிழமை நேரடியாக விசாரணை மேற்கொண்டாா். பல்வேறு வழக்குகளில் தொடா்புடையவா்கள் தொடா்ந்து கண்காணிக்கப்படுவாா்கள் என அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com