அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஆத்தூரில் சத்துணவு உதவியாளா் வீட்டில் தங்க நகை மாயம்

ஆத்தூா் அருகே பீரோவில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகைகள் மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 7:46 pm

DIN

ஆறுமுகனேரி: ஆத்தூா் அருகே பீரோவில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகைகள் மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஆத்தூா் பரவா் தெருவை சோ்ந்தவா் சாந்தகுரூஸ். ஆட்டோ ஓட்டுநரான இவரது மனைவி மாலதி(50).

இவா், புன்னை சாஸ்தான்குறிச்சியில் சத்துணவு மைய உதவியாளராக பணிபுரிந்து வருகிறாா். இவா் உறவினா் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக பீரோவை திறந்து பாா்த்த போது, அதிலிருந்த 8 பவுன் தங்க நகைகளை காணவில்லையாம்.

இதுகுறித்து ஆத்தூா் காவல் நிலையத்தில் மாலதி அளித்த புகாரின்பேரில் உதவி ஆய்வாளா் மாணிக்கராஜ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.