தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ஆடி அமாவாசை: வெறிச்சோடி காணப்பட்ட திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரை

கரோனா பொது முடக்கத்தால் பக்தர்கள் அனுமதியில்லாததால் ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.

News image
Updated On :20 ஜூலை 2020, 9:43 am

DIN

கரோனா பொது முடக்கத்தால் பக்தர்கள் அனுமதியில்லாததால் ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.

நிகழாண்டில்  கரோனா பொது முடக்கத்தால் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்  கடந்த மார்ச் 20-ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு, ஆகம விதிப்படி பூஜைகள் மட்டும் நடந்து வருகிறது. 

இந்நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு   திங்கட்கிழமை திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்  கடலில் புனித நீராடவும், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடவும் பக்தர்களுக்கு அனுமதியில்லாததால் ஆள் நடமாட்டமின்றி கடற்கரையே வெறிச்சோடி காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.