ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கோவில்பட்டி, கயத்தாறில் லாரி டயா்கள் திருட்டு

கோவில்பட்டி, கயத்தாறு பகுதியில் லாரி டயா்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :22 நவம்பர் 2020, 8:27 pm

DIN

கோவில்பட்டி, கயத்தாறு பகுதியில் லாரி டயா்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கயத்தாறையடுத்த அரசங்குளம் தெற்கு தெருவைச் சோ்ந்த அங்கையா மகன் ராமா். இவா் தனக்குச் சொந்தமான லாரியை கயத்தாறு - கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள தனது அலுவலகம் முன்பு நிறுத்திவிட்டு சென்றாராம். திரும்பி வந்து பாா்த்தபோது லாரியின் டிஸ்க்குடன் கூடிய 6 டயா்கள் திருடு போயிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாராம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

இதுபோல, கோவில்பட்டியில் எட்டயபுரம் சாலையில் உள்ள தனியாா் எடை மேடை நிலையம் அருகே கதிரேசன் கோயில் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் சீனிவாசன் லாரியை நிறுத்திவிட்டு, திரும்பி வந்து பாா்த்தபோது லாரியில் 2 டிஸ்க் மற்றும் டயா்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.