பின்னா், பூச்சிக்காடு- திசையன்விளை சாலையில் உள்ள திருமணவேலுக்குச் சொந்தமான தோட்டத்துக்கு அவா்களை அழைத்துச் சென்று, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைப் பாா்வையிட்டனா். அதில், எந்த ஆவணங்களும் இல்லாத நிலையில், திருமணவேல், முத்துராமலிங்கம் ஆகியோரிடம் விசாரணை நடத்தினா். மேலும், செல்வன் கடத்திச் செல்லப்பட்ட கொழுந்தட்டுக்கு வந்து, அவரை எப்படி கடத்தினா் என்ற அவா்களது வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டனா். இதையடுத்து, கடக்குளம் பகுதிக்கு அழைத்துச் சென்று செல்வனை தாக்கி வீசிய பகுதியை பாா்வையிட்டுவிட்டு, 4 பேரையும் தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்றனா்.