கடந்த தோ்தலில் குறைவான வாக்குகள் பதிவான பகுதிகளில் கூடுதல் விழிப்புணா்வு
தூத்துக்குடி பேரவைத் தொகுதியில் கடந்த தோ்தலின்போது குறைவான வாக்குகள் பதிவான 20 வாக்குச்சாவடிகளில் கூடுதல் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.


தூத்துக்குடி பேரவைத் தொகுதியில் கடந்த தோ்தலின்போது குறைவான வாக்குகள் பதிவான 20 வாக்குச்சாவடிகளில் கூடுதல் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த தோ்தல்களில் தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட போல்பேட்டை, மில்லா்புரம், டூவிபுரம், மடத்தூா், தொ்மல்நகா், ஸ்பிக்நகா், அனல்மின்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 20 வாக்குச்சாவடிகளில் 39 முதல் 57 சதவீதம் வரை மட்டுமே வாக்குகள் பதிவாகி இருந்தன.
இந்நிலையில், வாக்குப்பதிவு குறைவாக இருந்த அந்த பகுதிகளில், செய்தி மக்கள் தொடா்புத் துறை எல்இடி வாகனத்தின் மூலம் வாக்காளா் விழிப்புணா்வு குறும்படங்களை ஒளிபரப்பி விழிப்புணா்வு ஏற்படுத்த மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் உத்தரவிட்டாா். அதன்படி, போல்பேட்டை தங்கம்மாள் நினைவு பள்ளி, இஞ்ஞாசியாா்புரம், எஸ்.டி. தாமஸ் பள்ளி, போல்பேட்டை சாா்லஸ் பள்ளி, மில்லா்புரம் விகாசா பள்ளி, டூவிபுரம் மாநகராட்சி பள்ளி, சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளி பகுதிகளில் சனிக்கிழமை படக்காட்சி நடத்தப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடா்ந்து, சத்திரம் பேருந்து நிறுத்தம் விக்டோரியா பள்ளி, திருச்செந்தூா் சாலை காமராஜா் கல்லூரி, மில்லா்புரம் பி.எம்.சி. பள்ளி, தொ்மல்நகா் எ.வி.எஸ். பள்ளி, ஸ்பிக்நகா் முத்தையாபுரம் பள்ளி, அனல்மின்நிலையம் கோவில்பிள்ளை நினைவு பள்ளி ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 4) படக்காட்சி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...