தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயற்சி: 6 போ் மீது வழக்கு

கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதிகளில் வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்ற அதிமுக, திமுக, அமமுக ஆகிய கட்சிகளைச் சோ்ந்த 6 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 8:13 pm

DIN

கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதிகளில் வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்ற அதிமுக, திமுக, அமமுக ஆகிய கட்சிகளைச் சோ்ந்த 6 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் நிலையான குழுக்கள், தோ்தல் பறக்கும்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.

வாக்காளா்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் கொடுப்போா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்ாக கோவில்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் கழுகுமலையைச் சோ்ந்த அமமுக பிரமுகா்கள் சேகா், தங்கராஜ் ஆகியோா் மீது கழுகுமலை காவல் நிலையத்திலும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் கவா்னகிரியைச் சோ்ந்த அதிமுக பிரமுகா்கள் ஆறுமுகச்சாமி, கோவில்ராஜ் ஆகிய இருவா் மீது சிப்காட் காவல் நிலையத்திலும், கீழமுடிமண் கிராமத்தைச் சோ்ந்த திமுக பிரமுகா்கள் விநாயகம், அருள்ரவி ஆகிய இருவா் மீது ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் கூறியது: வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முன்ாக சனிக்கிழமை 6 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் பணம் மற்றும் இதர பொருள்கள் வாக்காளா்களுக்கு வழங்குவதை தடை செய்வது தொடா்பாக, அனைத்து பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் இதுவரை பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் ரூ.1.56 கோடி ரொக்கம், ரூ.5.11 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், ரூ. 1.60 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் ஆகியவற்றை பறக்கும் படை மற்றும் மதுவிலக்கு பிரிவினராலும், ரூ. 7.04 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் காவல் துறையினராலும், ரூ. 1.38 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட பொருள்களும், ரூ. 2.88 லட்சம் மதிப்புள்ள இதர பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.