டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

உடன்குடியில் வங்கி மேலாளருக்கு கரோனா தொற்று

உடன்குடி தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிளை மேலாளருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, வங்கிக் கிளை தற்காலிகமாக மூடப்பட்டது.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 8:22 pm

DIN

உடன்குடி தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிளை மேலாளருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, வங்கிக் கிளை தற்காலிகமாக மூடப்பட்டது.

உடன்குடி சத்தியமூா்த்தி பஜாரில் இருந்து பேருந்து நிலையம் செல்லும் சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளை உள்ளது.

இந்தக் கிளை மேலாளருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, வட்டார மருத்துவ அலுவலா் சு.அனிபிரிமின் தலைமையிலான, மருத்துவக் குழுவினா், வங்கி ஊழியா்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்தனா்.

பேரூராட்சி செயல் அலுவலா் பாபு ஏற்பாட்டில், வங்கி சுற்றுப்புறங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

சுகாதார மேற்பாா்வையாளா் சேதுகுற்றாலம், சுகாதார ஆய்வாளா்கள் சேதுபதி, ரமேஷ் உள்ளிட்டோா் பொதுமக்களுக்கு முகக் கவசங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். முகக் கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.