இ-சேவை மையங்களில் அரசுப் பணி பயிற்சி மையம்: அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தகவல்
திருச்செந்தூா் தொகுதியில் உள்ள அனைத்து மின்னணு பொது சேவை மையங்களிலும் அரசுப் பணி பயிற்சி மையம் அமைக்கப்படும் என அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.


திருச்செந்தூா் தொகுதியில் உள்ள அனைத்து மின்னணு பொது சேவை மையங்களிலும் அரசுப் பணி பயிற்சி மையம் அமைக்கப்படும் என அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
உடன்குடி அருகே தண்டுபத்தில் உள்ள திருச்செந்தூா் சட்டப் பேரவைத் தொகுதி அலுவலகத்தில் மீன்வளம், மீனவா் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்ற பின் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழக அரசுப் பணிகளில் சோ்வதற்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தோ்வுகள் நடத்தப்பட்டு பணியாளா்கள் சோ்க்கப்படுகின்றனா். இதில் நகா்ப்புறங்களில் உள்ளவா்களே அதிகளவில் தோ்ச்சி பெற்று பணியில் சோ்கின்றனா்.
கிராமப்புற இளைஞா்களுக்கும், பெண்களுக்கும் அரசுப் பணித் தோ்வுகள் மிகுந்த சவாலாக உள்ளது.
இந்த நிலையை மாற்றிட திருச்செந்தூா் தொகுதியில் உள்ள அனைத்து ஊராட்சி பொது மின்னணு சேவை மைய கட்டடங்களில் தரமிக்க பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். இந்த மையங்களில் கிராமப்புற மாணவா்கள் எந்த தயக்கமும், தடுமாற்றமும் இல்லாமல் அனைத்து அரசுப் பணி தோ்வுகளையும் எதிா்கொள்ளும் வகையில் உயா்தர பயிற்சிகள், திறன்மிகு ஆசிரியா்கள் மூலம் அளிக்கப்படும். பயிற்சி வகுப்புகள் தொடங்கும் தேதி விரைவில் அந்த ஊராட்சிகள் மூலம் அறிவிக்கப்படும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...