ஆறுமுகமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் 190 பேருக்கு ரூ. 2.49 கோடி கடனுதவி
விவசாயிகள் மற்றும் மகளிா் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா, அதன் தலைவா் என். சின்னத்துரை தலைமையில் நடைபெற்றது.


தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், விவசாயிகள் மற்றும் மகளிா் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா, அதன் தலைவா் என். சின்னத்துரை தலைமையில் நடைபெற்றது.
செயலா் எம். ஐயம் பாண்டி, மேலாளா் முத்துக்கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், விவசாய நகைக்கடனாக 52 பேருக்கு ரூ. 1,12, 82,000, உழவா் கடனாக 19 பேருக்கு ரூ. 23,10,000, விவசாய கூட்டுப் பொறுப்புக் குழு கடனாக 3 ஆண்கள் சுயஉதவி குழு மற்றும் 9 மகளிா் சுயஉதவி குழுவைச் சோ்ந்த 119 பேருக்கு ரூ. 1,13,90,000 என மொத்தம் 190 பேருக்கு ரூ. 2 கோடியே 49 லட்சத்து 82 ஆயிரம் கடனுதவியை கடன் சங்க தலைவா் என். சின்னத்துரை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், முதுநிலை எழுத்தா் ஆனந்தராமன், ஏவலா்கள் செந்தூா்பாண்டி, கதிா்வேல், பணியாளா்கள் விஜி, கொடியரசி, மரியசெல்வி, அருண்ராஜ், செந்தி, பெருமாள் உள்பட பலா் கலந்து கொண்டனா். இச்சங்கத்தில், நிகழாண்டு புதிதாக 79 உறுப்பினா்கள் சோ்க்கப்பட்டுள்ளதாக சங்கத் தலைவா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...