இந்தியா- பாகிஸ்தான் போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரா்களுக்கு பாராட்டு
இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போரில் பங்கேற்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்களுக்கு ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வியாழக்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.


இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போரில் பங்கேற்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்களுக்கு ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வியாழக்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.
ஆட்சியா் அலுவலகத்தில் முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சோ்ந்தோருக்கான சிறப்பு குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், 19 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, 1971ஆம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரின் 50ஆவது ஆண்டு தின நிகழ்ச்சி ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது. அப்போரில் பங்கேற்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா்கள் செல்லப்பா, மனோகரன், கணபதி, காசி அருணாசலம், மாடசாமி, ராமசாமி, சுப்பையா, அண்ணாமலை, சுப்பையா நாராயணன், காசிராம், குருசாமி, ராஜநாராயணன் ஆகியோருக்கு ஆட்சியா் கி. செந்தில்ராஜ் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தாா்.
முன்னாள் படைவீரா் நலன் உதவி இயக்குநா் சுஜாதா, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி கா்னல் மா. சுந்தரம், முன்னாள் ராணுவ வீரா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...