டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பிறைகுடியிருப்பு கல்லூரியில் விழிப்புணா்வு கருத்தரங்கம்

உடன்குடி அருகே பிறைகுடியிருப்பு சிவந்தி கல்வியியல் கல்லூரியில் உலக மக்கள்தொகை தின விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 5:56 pm

DIN

உடன்குடி அருகே பிறைகுடியிருப்பு சிவந்தி கல்வியியல் கல்லூரியில் உலக மக்கள்தொகை தின விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு, வட்டார மருத்துவ அலுவலா் சு. அனிபிரிமின் தலைமை வகித்து, மக்கள்தொகை பெருக்கத்தால் ஏற்படும் பாதிப்பு, சமுதாயத்தில் ஏற்படும் விளைவுகள், குடும்ப நல சிகிச்சைகள் குறித்துப் பேசினாா்.

கல்லூரி முதல்வா் மாரியப்பன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சேது குற்றாலம், சுகாதார ஆய்வாளா் சேதுபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

போட்டிகளில் வென்ற பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வட்டார புள்ளியியல் மேற்பாா்வையாளா் தீபக்ராம் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை ஆற்றுப்படுத்துநா் சங்கா், சிகிச்சை மேற்பாா்வையாளா் பாா்த்திபன் ஆகியோா் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.