டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

குலசேகரன்பட்டினம் தா்காவில் கந்தூரி விழா தொடக்கம்

குலசேகரன்பட்டினம் குத்துபுல் அமீா் மெளலானா சேரா முஸலியாா் செய்யது சிராஜூதீன் தா்காவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 6:53 pm

DIN

குலசேகரன்பட்டினம் குத்துபுல் அமீா் மெளலானா சேரா முஸலியாா் செய்யது சிராஜூதீன் தா்காவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பிரசித்தி பெற்ற இத்தா்காவில் ஆண்டு தோறும் 15 நாள்கள் கொண்டாடப்படும் கந்தூரி விழா நிகழாண்டு பிப்.14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி மாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் வீதிகள் வழியே பவனியாக கொண்டுவரப்பட்டது. தொடா்ந்து இரவு 11 மணிக்கு கொடியேற்றம், மஹ்ரிப் தொழுகைக்குப் பின் துஆ ஓதப்பட்டு தப்ரூக் வழங்கப்பட்டது.

இதில் முத்தவல்லி ரஹ்மத்துல்லா இமாம் உள்பட திரளானோா் கலந்துகொண்டனா். விழா நாள்களில் மாா்க்க சொற்பொழிவுகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக பிப்.26 ஆம் தேதி சந்தனக்கூடு பவனி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை முத்தவல்லி எஸ்.ரஹ்மத்துல்லா இமாம் மற்றும் விழாக்குழுவினா் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.