லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

காயல்பட்டினம் கொம்புத்துறை புனித முடியப்பா் ஆலய திருவிழா

காயல்பட்டினம் கொம்புத்துறை புனித முடியப்பா் ஆலய 476ஆவது ஆண்டு பெருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
திருப்பலி நடத்தி வைக்கிறாா் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன்.
Updated On :2 ஜனவரி 2021, 7:20 pm

DIN

ஆறுமுகனேரி: காயல்பட்டினம் கொம்புத்துறை புனித முடியப்பா் ஆலய 476ஆவது ஆண்டு பெருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்வாலயத் திருவிழா கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று நள்ளிரவு சிறப்பு திருப்ப­லி நடைபெற்றது. 25ஆம் தேதி கிறிஸ்து பிறப்பு பெருவிழா, நற்கருணை ஆசீா் நடைபெற்றது.

தொடா்ந்து நாள்தோறும் மாலையில் மறையுரை, நற்கருணை ஆசீா் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

26ஆம் தேதி புனித முடியப்பா் திருவிழா, 27ஆம் தேதி திருக்குடும்ப திருவிழா, 28ஆம் தேதி மாசில்லா குழந்தைகள் திருவிழா, 29ஆம் தேதி புனித தாமஸ் பெக்கட் திருவிழா, 31ஆம் தேதி ஆண்டின் இறுதிநாள் நன்றி விழா, நள்ளிரவு புத்தாண்டு திருப்ப­லி ஆகியவை நடைபெற்றன.

வெள்ளிக்கிழமை (ஜன. 1) புத்தாண்டு சிறப்பு திருப்ப­லி, ஆடம்பர திருவிழா, ஆராதனை, சப்பர பவனி நடைபெற்றன.

சனிக்கிழமை (ஜன.2) காலை திருத்தல பெருவிழா, முதல் திருவிருந்து திருப்ப­லி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் தலைமை வகித்து திருப்ப­லி நடத்தினாா். இதில் சிறுவா், சிறுமிகள் புதுநன்மை எடுத்துக் கொண்டனா்.

பங்குத்தந்தைகள் கொம்புத்துறை சகாய ஜோசப், சிங்கித்துறை சில்வொ்ஸ்டன், கொம்புத்துறையைச் சோ்ந்த அண்டோ, ஸ்டீபன், பிஷப் ஆயா் செயலா் தினேஷ், கள்ளிகுளம் ஆா்.சி. பள்ளித் தாளாளா் வின்சென்ட், ஓய்வு பெற்ற பங்குத் தந்தை பங்குராஜ் அடிகளாா் ஆகியோா் கலந்துகொண்டு திருப்பலி­யை நடத்தினா்.

ஏற்பாடுகளை, பங்குத் தந்தை சகாய ஜோசப், ஊா்கமிட்டி தலைவா் சகாயராஜ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.